கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை தளத்தின்மீது உக்ரைன் தாக்குதல் – முக்கிய தளபதி பலி

110 0

கிரிமியாவின் கருங்கடலில் உள்ள ரஸ்யாவின் கடற்படை தளத்தின் மீது மேற்கொண்ட உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை படையணியின் தளபதி உட்பட  34 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவஸ்டபோலில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

ரஸ்யாவின் கடற்படை தளபதிகளின் விசேட கூட்டத்தினை இலக்காக வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைனின் விசேட படைப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 34 அதிகாரிகள் உயிரிழந்தனர் தளபதியும் உயிரிழந்தார் 105 ஆக்கிரமிப்பாளர்கள் காயமடைந்துள்ளனர் கட்டிடம் திருத்தமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் விசேட படைப்பிரிவினர் கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் விபரங்களை வெளியிடாத போதிலும் உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

அட்மிரல் விக்டர் சொக்கொலொவ் என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என உக்ரைனின் உள்துறை அமைச்சின்  ஆலோசகர் தெரிவித்துள்ளார்.