ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து – 100 பேர் பலி

59 0
image
ஈராக்கில் திருமணநிகழ்வொன்றின் போது  ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்குஈராக்கில் திருமணநிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ விபத்தில் மணமக்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

அல்ஹம்டனியா மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் வெளியாகதபோதிலும் பட்டாசுகள் கொழுத்தப்பட்ட பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதற்காக போராடுவதையும் எரியுண்ட உடல்களையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகின்றன.

மீட்புபணிகளில் தீயணைப்புவீரர்கள் ஈடுபடுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகின்றன.

தீவிபத்து ஏற்பட்டவேளை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திருமண கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.