இளைஞனின் சடலம் மீட்பு

111 0

கிளிநொச்சி கோணாவில்,   ஊற்றுப்புலம் கிராமத்தின் நாற்சந்தியில் இளைஞனின் சடலமொன்று, திங்கட்கிழமை (25) இரவு 9 மணியளவில்  கிடப்பதை கண்ட பொதுமக்கள், அதுதொடர்பில் ​பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தைச்சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க புஸ்பராசா தினேஸ்கரன் என்பவரென அடையாளம்  காணப்பட்டுள்ளது.