யாழ். பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

142 0

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறையில் நேற்று (25.09.2023) இடம் பெற்றுள்ளது.

பொது அமைப்புக்களால் பருத்தித்துறை – மருதடி பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவு தூபியில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தலின் போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்ததுடன் நினைவுரை ஆற்றியிருந்தனர்.