நினைவேந்தலை விமர்சிப்பது மனவேதனையளிக்கிறது

97 0

திலீபனின் தியாகத்தின் தன்மையை அறியாத ஒரு சிலரும் இவ்வாறான தியாகங்களை செய்ய முடியாதோரும் நினைவேந்தலை விமர்சிப்பது மனவேதனையளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தீவக அமைப்பாளர் சுவாமிநாதன் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (25.09.20223) யாழ் ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”திலீபன் அஹிம்சை வழியில் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த இவர் செய்த தியாகத்தை செய்ய முடியாத சிலர் தமக்கு இரண்டு மொழிகள் தெரியும் என கூறிக்கொண்டு நினைவேந்தலுக்கெதிராக கண்காட்சிகளையும், போராட்டங்களையும் செய்ய முனைகின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னரும் யாழில் தியாக திலீபனின் நினைவேந்தலுக்கெதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

திலீபனின் தியாகத்தை மதிக்கவில்லை, கௌரவப்படுத்தவில்லை என்றாலும் தேவையில்லாமல் விமர்சித்து தாழ்த்த வேண்டாம்.”என தெரிவித்துள்ளார்.