பங்களாதேஷிடம் இருந்து பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தியுள்ளது.பங்களாதேஷ் வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி பங்களாதேஷ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த தவணையாக சுமார் 50 மில்லியன் டொலர்கள் மற்றும் 4.5 மில்லியன் டொலர்களை கடனுக்கான வட்டியாக இலங்கை செலுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.2021 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு வருட காலத்திற்கு இலங்கை கடனைப் பெற்றது. எனினும், மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியது மற்றும் இலங்கை அரசாங்கம் தன்னை திவாலானதாக அறிவித்தது. அதன்பிறகு, கடனை பலமுறை திருப்பிச் செலுத்த இலங்கை நீடிப்பு எடுத்தது.பங்களாதேஷ் வங்கியின் கூற்றுப்படி, இலங்கை ஆரம்பத்தில் ஒகஸ்ட் 20 அன்று 50 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியது. பின்னர் ஒகஸ்ட் 31 அன்று, அது 100 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியது. இறுதியாக, கடந்த வியாழன் மீதமுள்ள $50 மில்லியனைத் திருப்பி செலுத்தியுள்ளது.பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை மூன்று தவணைகளாக இலங்கை செலுத்தியுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025