கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட தனியார் துப்புரவு நிறுவனத்தின் பரிசோதகர் கைது!

128 0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக்குகளை உள்ளடக்கிய, சீன அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட புதிய அடுக்குமாடி கட்டடத்தில் பல்வேறு உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் தனியார் துப்புரவு நிறுவனம் ஒன்றின் பரிசோதகர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

சிசிரிவி கமராக்களில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையிலான விசாரணையின்போது உரிய நபரை அடையாளம் காண முடிந்ததாகவும் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.