தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடல்

110 0

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை மற்றும் இந்தியாவின் பிரதான பேச்சுவார்த்தையாளர்கள்; சந்திப்பொன்றை நடத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஒப்பந்தம் புதுடெல்லியில் முன்மொழியப்பட்ட நிலையில், இந்திய மற்றும் இலங்கை தரப்புகளுக்கு இடையில் நான்காவது வர்த்தக செயலாளர் மட்ட பேச்சுவார்த்தையின் போது 2015 இல் நுவுஊயு பற்றிய ஆரம்ப விவாதங்கள் இடம்பெற்றமை குறி;ப்பிடத்தக்கது.