காலி துப்பாக்கி சூட்டில் இறந்த வர்த்தகர் இராஜாங்க அமைச்சரின் மாமனார் !

112 0
காலி – டிக்சன் வீதியில் நேற்று சனிக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த வர்த்தகர், மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக்கவின் மாமனார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலியில் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.