கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம்!

123 0
கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (23) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம்  கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் 40 முதல் 45 வயதுடையவர் எனவும் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் கடைசியாக நீண்ட நீல நிற டெனிம் அணிந்திருந்தார்.