எட்கா தொடர்பான கலந்துரையாடல் ஒகஸ்டில்?

348 0

thumb_large_journalist-ETCAஎட்கா உடன்படிக்கை ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னர் கைச்சாத்தாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமையவே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் மலிக் சமரவிக்ரம, இது முற்றிலும் பிழையான தகவல் என்று கூறினார்.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின்றன.

இந்த கலந்துரையாடல்கள் டிசம்பர் மாதம் அளவில் நிறைவடையும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு ஒருமாதத்துக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.