இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும் – ஜனாதிபதி

321 0

MS-jaffna-visite-4546eஇடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் விரைவில் குடியேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் வைத்து அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 971 குடும்பங்கள் 31 இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வருகின்றனர்.

அத்துடன் 641 குடும்பங்கள் காணிகள் இல்லாத நிலையில் உள்ளன.

இந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 971 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடமைப்பு திட்டத்துக்காக அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.