பசறை, தொலம்பவத்த பகுதியில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

99 0

பசறை, தொலம்பவத்த பகுதியில் புதையல் தோண்டிய போது சந்தேகத்தின் பேரில் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட  7 பேருக்கு எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு  பதுளை நீதவானால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த  19ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை பசறை, தொலம்பவத்த, 4ஆம் கட்டைப் பகுதியில் உள்ள  விகாரைக்கு அருகாமையில்  புதையல் தோண்டும் பணியில்  ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் வெலிமடை, ஒக்கம்பிடிய மற்றும் தொலம்பவத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என  பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கையின் போது புதையல் தோண்டும் நோக்கில் பயன்படுத்தப்பட்ட  பூஜை பொருட்கள், உபகரணங்கள்  என்பவையும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும். அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில்  தெரிவித்தனர்.

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய.   தகவலின் அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பியரத்ன ஏகநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு இருந்தனர்.