காட்டு யானைகளால் தாக்கப்பட்ட பொறுப்பதிகாரியும் கான்ஸ்டபிளும்

139 0
கந்தளாய்  தியபொத பொலிஸ்  நிலையப்  பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர்  காட்டு  யானைகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த இவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்தியோகபூர்வ நோக்கத்துக்காக  இவர்கள் நேற்று புதன்கிழமை (20) பாதுகாப்பு வனப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த யானைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.