போர் குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

135 0

போர் குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணையை  வலியுறுத்துமாறு கோரி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச அமைதி தினத்தையொட்டி வியாழக்கிழமை காலை (21) மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் காலை 10 மணிக்கு ஆரம்பமான பாரிய ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக இடம்பெற்றது. பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆண்களும் பெண்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தயாரிக்கப்பட்ட மகஜறினை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதியிடம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு பிரதிநிதிகள் கையளித்தனர்.