இலங்கையின் தெற்கு பல்கலைக்கழகத்திற்கு இந்தியா உதவி

347 0

india-sri-lankaஇலங்கையின் தெற்கு பல்கலைக்கழகத்தில் ஆயிரத்து 500 பேர் அமரக்கூடிய கேட்போர் கூடம் ஒன்றை இந்தியா நிர்மாணிக்கவுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இந்தியா ஒதுக்கியுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமான கல்விசார் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த கேட்போர் கூடம் மாத்தறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.