இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற மலேஷியர் திருப்பி அனுப்பப்பட்டார்!

107 0
இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற மலேஷியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு  அவர் வந்த அதே விமானத்தில் மீண்டும் தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 33 வயதான மலேஷியரே இவ்வாறு கைதாகி நாடு கடத்தப்பட்டவராவர்.

அபுதாபியில்  வைத்து  குறித்த மலேஷிய பிரஜை,  இலங்கை கடவுச்சீட்டு ஒன்றை இலங்கை இளைஞர் ஒருவரிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான குடிவரவு அதிகாரிகளான டி.ஜே.வீரசிங்க மற்றும் எச்.எம்.டபிள்யூ. உதயகுமார ஆகியோரின் ஆலோசனையின் பேரில் குடிவரவு குடியகல்வு அதிகாரி ஈ.ஏ.விஜேநாயக்கவினால் இந்த கைது மற்றும் நாடு கடத்தல்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.