மூதூரில் கஜேந்திரன் எம்.பி. தாக்கப்பட்டமைக்கு நீதி கோரி கண்டன போராட்டம்

192 0

மூதூர் மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குதல் சம்பவத்துக்கு நீதி கோரியும் இன்று புதன்கிழமை (20) மாலை கண்டன போராட்டம் இடம்பெற்றது.

இந்த பேரணியில் கலந்துகொண்ட மக்கள் கட்டைபறிச்சான் இறால் பாலத்தில் இருந்து பேரணியாக மூதூர் மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது தாக்குதல் சம்பவத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.