மலேசிய சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசனை

324 0

swissமலேசியாவில் சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்படும் என்று, இலங்கை வந்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான அஹமட் சாஹிட் ஹிமிடி தெரிவித்துள்ளார்.
குடிவரவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 50 இலங்கையர்கள் மலேசியாவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை இலங்கைக்கு நாடுகடத்துவது தொடர்பில் இலங்கை அதிகாரிகள், மலேசிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த விடயம் தமது கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், இது குறித்து ஆலோசனை செய்யவிருப்பதாக மலேசிய உதவி பிரதமர் அஹமட் சாஹிட் ஹிமிடி குறிப்பிட்டுள்ளார்.