ஆசிரியரால் பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

62 0

வத்தேகம பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதுடைய கணிதப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தேகம பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் வகுப்பறையில் நீண்ட நாட்களாக குறித்த மாணவியை ஆசிரியர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.