கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் ரத்கமவில் மீட்பு!

59 0
ரத்கம மயானத்துக்கு பின்புறமாக  உள்ள குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர்  ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ரத்கம கம்மெத்தேகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஷெஹான் நிலங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குளம் ஒன்றில்  சடலம் மிதப்பதாக வந்த தகவலின் பேரில், நேற்று திங்கட்கிழமை (18) மாலை அங்கு சென்ற பொலிஸார்  சடலத்தை கரைக்குக் கொண்டு வந்தனர்.

நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவிருந்தது.