சதோச நிறுவன முன்னாள் தலைவர் கைது

523 0

arest_18கைது செய்யப்பட்ட சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணாண்டோவை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலுவலக வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் அவர் கொழும்பு குற்றப்பிரிவு காவற்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து, அவர் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலை செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.