இந்திய மீனவர்களுக்கு இலங்கையில் அனுமதி இல்லை

323 0

558182493Amaraweeraஇலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள், மீன்பிடியில் ஈடுபடும் வகையிலான எந்த வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் 75 நாட்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கவும், அத்துடன் அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் இந்தியாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது கோரிக்கைகள் மாத்திரமே என்று தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் எந்தவிதமான கலந்துரையாடல்களையோ தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நாட்டில் உள்ள மீனவர் சங்கங்களுடன் கலந்துரையாடியே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.