வீசா இன்றிய நிலையில் பங்களாதேஸ் பிரஜை இலங்கையில் கைது

345 0

policesவீசா இன்றி நாட்டில் தங்கி இருந்த பங்களாதேஸ்வாசி ஒருவர் பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இலங்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாற்றி வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியந்துள்ளது.

கைதானவர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.