வெற்றிவைக்கேணியில் ஏழு மீனவர்கள் கைது

61 0
வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுடன் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டைக்காடு முள்ளியானை பகுதிகளைச் சேர்ந்த 21 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதானவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.