இலங்கை – ஜப்பானுக்கிடையில் தொழிநுட்ப ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

93 0

இலங்கை மின்சார சபை 2018 ஆம் ஆண்டு தொடக்கம் ஜப்பான் மின்சக்தி நிலையத்துடன் இணைந்து பங்களிப்புடன் செயலாற்றியதுடன், 2019 ஆம் ஆண்டில் தொழிநுட்ப ஒத்துழைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு செயலாற்றியதற்கு அமைவாக ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்புக்களின் அடிப்படையில் பல்வேறு அறிவுப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபடுவதற்கு இயலுமாகும் வகையில் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் தொழிநுட்ப ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இரு தரப்பும் உடன்பட்டுள்ளது.

அதற்காக முன்மொழியப்பட்டுள்ள தொழிநுட்ப ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்த வரைபு சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அவதானிப்புக்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.