‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ தொனிப்பொருளிலான ‘மலையகம் 200’ எழுச்சி நடைபயணம் இன்று (09) கெக்கிராவயில் ஆரம்பமாகி தம்புள்ளை நோக்கி செல்கிறது.
மேலும், இந்த நடைபயண பேரணியினருக்கு கெக்கிராவை ஜும்மா பள்ளிவாசலை சேர்ந்தோர் ஆசி வழங்கி, இறை பிரார்த்தனையில் ஈடுபட்டு, விருந்துபசார நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
தலைமன்னார் முதல் மாத்தளை வரை மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இடம்பெற்று வரும் இந்த நடைபவனி கடந்த ஜூலை 28ஆம் திகதி ஆரமபமானது.
எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியினர் மாத்தளையை அடைவதோடு நடைபவனி நிறைவுறும் என கூறப்படுகிறது.