கைதான 9 தமிழக மீனவர்களுக்கும் சிறைத் தண்டனை!

84 0
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 9 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் அதனை 5 வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த ஜூலை 25ஆம் திகதி அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதனையடுத்து, மறுநாள் கடற்தொழில் நீரியல் வளங்கள் அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவேளை, அந்த 9 பேரையும் செவ்வாய்க்கிழமை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று 09 பேரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து, இழுவைமடி பயன்பாடு, அனுமதியின்றி தொழிலில் ஈடுபட்டமை மற்றும் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களிலும் 09 பேரும் குற்றவாளிகளாக அறிவித்துள்ள நீதிமன்றம் ஒவ்வொருக் குற்றத்திற்கும் தலா 6 மாத சிறைத்தண்டனை வழங்கி, அதனை 5 வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.