மின்சாரக் கட்டணம் தொடர்பில் வதந்தி பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

105 0

தனது திருமண விருந்துடன் தொடர்புடைய மின்சாரக் கட்டணத்தில் மில்லியன்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், செலுத்தப்படாததாகக் கூறப்படும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் எழுத்துபூர்வமாக விளக்கமளிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், திங்கட்கிழமை (07) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாமலின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததாகக் கூறப்படுவது ராஜபக்க்ஷ குடும்பத்தை அவதூறு செய்யும் சதி எனக் கூறியிருந்தார்.