நைஜரின் இராணுவதலைவர்களுடன் அமெரிக்காவின் பிரதிநிதியொருவர் நேரடி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் பதில்பிரதி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் நைஜரின் இராணுவதலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
மிகவும் வெளிப்படையான பல சந்தர்ப்பங்களில் கடினமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக அமெரிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இரண்டு மணிநேரம்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன – சதிப்புரட்சிகளில் ஈடுபட்டவர்கள் மீண்டும் அரசமைப்பினை ஏற்படுத்த விரும்பினால் அமெரிக்கா அவர்களுக்கு உதவ தயார்என தெரிவிக்கப்பட்டதாக நுலாண்ட் தெரிவித்துள்ளார்.
நைஜரில் ஆட்சியை கைப்பற்றியவர்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக ரஸ்யாவின் வாக்னர் குழுவின் உதவியை நாடியுள்ளமை குறித்த தகவல்கள் குறித்து கரிசனை வெளியிட்டதாக விக்டோரியா நியுலாண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் வாக்னர் குழு உள்ளே நுழைந்ததும் இறைமைக்கு ஏற்படக்கூடிய ஆபத்தினை நன்கு உணர்ந்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.