சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் இருந்து 3 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு!

91 0

சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் இருந்து உடவளவை நீர்த்தேக்கத்திற்கு நாளொன்றுக்கு 3.5 மில்லியன் கனமீற்றர் வீதம் நீர் நாளை முதல் மூன்று நாட்களுக்கு பயிர்ச்செய்கைக்காக திறந்து விடப்படவுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்  டி.வி. சானக்க இதனை தெரிவித்தார்.

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் கொள்ளளவை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, உடவளவை நீர்த்தேக்கத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விடுவிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்தார்.