துப்பாக்கிச் சூடு – மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது!

89 0

பம்பலப்பட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி மெரின் டிரைவ் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்வில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காரில் பயணித்தவர்கள்  போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், குறித்த கார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.