சாரதியை தாக்கிவிட்டு கார் கொள்ளை

103 0

இரத்தினபுரி – அயகம பிரதேசத்தில் வாடகைக்கு வாகனங்கள் சேவைக்கு விடும் நிறுவனமொன்றின் சாரதியை தாக்கி விட்டு வாடகை கார் ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.

கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் காரை வாடகைக்கு பெற்றுக் கொண்டு குறித்து சாரதியுடன் பயணித்துள்ளனர்.

இடைநடுவில் குறித்த சாரதிக்கு ஆயுதத்தை காண்பித்து அச்சுறுத்தி 02 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பையொன்றை பறித்துவிட்டு, சாரதியை காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு காரையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.