அத்துருகிரிய பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு அழைப்புவிடுத்து அவரது மனைவியையும் பிள்ளைகளையும் கொலை செய்யப்போவதாக மிரட்டி 80 இலட்சம் ரூபா பணத்தை பெற முயன்ற முன்னாள் கடற்படை சிப்பாய் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அத்துருகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாரத பெர்னாண்டோ குறித்த தொலைபேசி அழைப்பை ஆராய்ந்த போது சந்கே நபர்களின் இருப்பிடத்தை பொலிஸார் கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்.
அத்துருகிரிய ஒருவல மற்றும் முல்லேகம பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஒருவரும் , 40 வயதுடைய ஓய்வுபெற்ற கடற்படை வீரர் ஒருவருமே இவ்வாறு அத்துருகிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.