மருந்து ஒவ்வாமை தொடர்பில் விரைவில் அறிக்கை

76 0

கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பயன்படுத்தப்படும் மருந்தினால் ஏற்பட்டதாக கூறப்படும் ஒவ்வாமை தொடர்பில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எஸ்.கே ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் விசாரணை செய்யும் குழு, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விசாரணையின் பின்னர் தயாரிக்கப்பட்டும் அறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அனைத்து தரவு அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, முழுமையான அறிக்கையை சுகாதார செயலாரிடம் சமர்ப்பித்த பிறகு, அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை அமைச்சகம் தீர்மானிக்கும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.