இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லே – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று சந்திப்பு

105 0
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட சில காரணிகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் மற்றும் சர்வகட்சி மாநாடு ஆகியவற்றின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.