பல இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரப்பலகைகளுடன் ஒருவர் கைது

67 0
பல இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரப்பலகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புன்னைநீராவி பகுதியில் மரப்பலகைகள் இருப்பது தொடர்பில் வனஜீவராசிகள்  திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து செவ்வாய்க்கிழமை (01) விசேட அதிரடிபடையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை பலகைகள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நாளை (02) நீதிமன்றில்  ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.