நாட்டில் மீண்டும் மின்வெட்டு: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

64 0

நாட்டில் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்து விடப்பட்டால், அன்றைய தினம் முதல் இவ்வாறு மின் தடை ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

4, 5 நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் விட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு இன்றி திறந்து விடக்கூடிய அதிகபட்ச நீரை தொடர்ந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறு இருப்பினும், இரண்டு மணித்தியாலங்கள் மின்சாரம் தடை செய்தேனும் விவசாயத்திற்கு தேவையான நீரை விடுவிப்பது தற்போது அத்தியாவசியமான விடயம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.