சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

85 0

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெறுகின்றது.

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து  சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக  திங்கட்கிழமை (31) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்த சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) பி.ப 4.00 மணிவரை  இடம்பெறவுள்ளது.