சியாரோலியோனிற்கு கடத்தப்பட்ட 15 இலங்கையர்கள் மீட்பு – இன்டர்போல்

135 0
சியாரோலியோனிற்கு கடத்தப்பட்ட 15 இலங்கையர்களை இன்டர்போல் மீட்டுள்ளது.

விசேட பொலிஸ் நடவடிக்கையின்போது இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்டர்போலிற்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்டர்போலின் மனிதகடத்தல் ஆள்கடத்தலிற்கு எதிரான பிரிவு மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது உலகநாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

பிளாஸ்வெக்கா நடவடிக்கையின் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள்  இலங்கை உட்பட ஆசியநாடுகளை சேர்ந்தவர்கள்  என இன்டர்போல் தெரிவித்துள்ளது.