மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே ஆளுநரிடம் அண்ணாமலை புகார் அளித்துள்ளார் – ஆர்.எஸ்.பாரதி

86 0

திருச்சியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தி.மு.க.வினர் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வருகிறோம். அண்ணாமலை என்ன கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. இந்த புகாரால் மக்கள் அண்ணாமலைக்கு வேறு வேலையே இல்லையா என நினைப்பார்களே தவிர, தி.மு.க.விற்கு எந்த அவப்பெயரும் ஏற்படாது.

நாங்கள் எதையும் சந்திக்க தயார். பிரச்சனைகளை திசை திருப்ப அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்போம். என தெரிவித்தார்.