அரநாயக்காவில் வீடமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

370 0

1469067358_1486467_hirunews_samasaraஅரநாயக்கவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரநாயக்க பிரதேச செயலாளர் ஷாம் ஃபைசால் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் முதல்கட்டமாக அரநாயக்க – வசந்தகம பகுதியில் 48 காணித் துண்டுகளில் வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த மண்சரிவினால் இன்னும் 11 இடைத்தங்கல் முகாம்களில் 491 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 334 பேர் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.