வரிப்பணம் செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்

404 0

fizer musthaba 5565rவரிப்பணம் செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு அனைத்து உள்ளுராட்சிமன்றங்களின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான உரிய வரிப்பணத்தை செலுத்தாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் வருமானத்தை 25 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.