ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு!

70 0

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
இத்தேர்தலில் மக்கள் ஆணைமூலம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும்’ என ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இவ்வருடம் எந்தத் தேர்தலும் நடத்தப்படா விட்டாலும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது உறுதியாகியுள்ளது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும்.
அதில் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 2024ஆம் ஆண்டு மக்களாணை மூலம் ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதை நான் பரிந்துரைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.