மாடுகள் முட்டியதில் மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில்!

74 0

மாடுகள் முட்டியதில் பாடசாலை மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தலை – ஹல்தும்முல்ல பகுதியில் மாணவர்கள் இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள், சிகிச்சைகளுக்காக ஹல்தும்முல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஹல்தும்முல்ல பகுதியில் உள்ள பாடசாலையின் மாணவர்களே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.