தியத்தலாவை பிரதேசத்தில் வசிக்கும் இவர், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பொறியியலாளர் பிரிவில் பணிபுரிபவர் என அத தெரண தெரிவித்துள்ளது.
ஜூலை 6ஆம் திகதி ஊவா-குடாஓயா கொமாண்டோ பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற தலைமைத்துவ நிகழ்ச்சியில் உயிரிழந்தவர் உட்பட நிறுவனத்தின் ஊழியர்கள் குழுவொன்று பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போதே சேறும் சகதியுமான ஏரி ஒன்றில் வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.