வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜென்ஜி பிரிகோஜினை கொல்வதற்கான ரஸ்யாவின் சதிமுயற்சி குறித்து உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
வாக்னர் குழுவினர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியதை தொடர்ந்தே அவரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான எவ்எஸ்பியிடம் வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ரஸ்ய புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே இதற்கான திட்டங்களை வகுக்கதொடங்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிகோஜினை கொல்வதற்கான உத்தரவு எவ்எஸ்பிக்கு வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம் ஆனால் அவர்கள் அதில் வெற்றிபெறுவார்களா என்பதை காலமே தெரிவிக்கும் என உக்ரைனின் புலனாய்வு துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சில முக்கியமான கேள்விகள் உள்ளன அவர்களால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா,அவர்களிற்கு அதற்கான துணிச்சல் உள்ளதா எனவும் உக்ரைனின் புலனாய்வு துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி புட்டினிற்கு நெருக்கமான வட்டாரங்களும் இதனை உறுதி செய்துள்ளன வாக்னர் கூலிப்படையின் தலைவருக்கு நஞ்சூட்டப்படலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.