புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் பலி!

253 0

கொழும்பு தொடக்கம் பதுளை வரை பயணித்த புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை அலவ்வ – வலகுபுர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பொல்கஹவெல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.