பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு : 18 பேர் கைது

250 0

நுகேகொடையில் நேற்று இரவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.