மட்டக்களப்பில் போலி முகவர்கள் : விழிப்பாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

93 0
மட்டக்களப்பில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக பலரிடம் பணங்களை பெற்று ஏமாற்றிய ஒரு போலி முகவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட 4 பேர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், சித்தாண்டியைச் சேர்ந்த போலி முகவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், 3 போலி முகவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, பொதுமக்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால் மட்டக்களப்பு  பொது சந்தை கட்டிடத்திலுள்ள அரசாங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சென்று தெரிவித்தால் அவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள் என பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனவே இந்த போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் செயற்படுமாறு பொலிஸார் பொது மக்களை  கேட்டுக் கொண்டுள்ளனர்.